ரித்திக்காவிற்கு அஞ்சலி செலுத்தி விட்டு கனத்த இதயத்தோடு திரும்பினேன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் கொலை செய்யப்பட்ட ரித்திகா எனும் 3 வயது சிறுமியின் உடலுக்கு இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சலி செலுத்தி அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக காவல் துறை குழந்தைகள், பெண்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்டு குப்பைக்கூடையில் வீசப்பட்ட 3 வயது ரித்திக்காவிற்கு அஞ்சலி செலுத்தி விட்டு கனத்த இதயத்தோடு திரும்பினேன் என்றார்.