ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000: தமிழக அரசு உத்தரவு

அம்மா இரு சக்கர வாகன' திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு ஸ்கூட்டர் வாங்குவதற்கு ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அம்மா இரு சக்கர வாகன' திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு ஸ்கூட்டர் வாங்குவதற்கு ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கையெழுத்திட்ட 5 முக்கிய கோப்புகள் அனைத்தும் அரசு உத்தரவுகளாக வெளியிடப்பட்டுள்ளன. அது குறித்து, ஊரக வளர்ச்சி-ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா வெளியிட்ட அரசு உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: இரு சக்கர வாகனம் வாங்க 50 சதவீத மானியம் வழங்கப்படும். 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.20,000 இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை நிகழ் நிதியாண்டில் இருந்து வழங்கப்படும்.
ஒரு லட்சம் உழைக்கும் மகளிர்: நிகழ் ஆண்டில் ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு மானியம் அளிக்கப்படும். ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என்று ஊரக வளர்ச்சி-ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளார்.
ரூ.20 ஆயிரம் கிடைக்கும்: ஒரு ஸ்கூட்டரின் விலையானது ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இந்த நிலையில், 50 சதவீத மானியம் அல்லது ரூ.20 ஆயிரம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, 50 சதவீத மானியம் என்றால் அது ரூ.20 ஆயிரத்தைத் தாண்டி விடும். எனவே, அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தின்படி ரூ.20 ஆயிரம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com