கைதி மர்மச் சாவு

திருச்சி மத்திய சிறையில், திங்கள்கிழமை விசாரணை கைதி மர்மமான முறையில் இறந்தார்.

திருச்சி மத்திய சிறையில், திங்கள்கிழமை விசாரணை கைதி மர்மமான முறையில் இறந்தார்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகேயுள்ள நரசிங்கமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (32). இவர், பேருந்து ஒன்றின் மீது கல்வீசி தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு, (பொது சொத்துக்கு பங்கம் விளைவித்தல்) கடந்த ஜனவரி 29ஆம் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது, இந்நிலையில், திங்கள்கிழமை காலை இவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, சிறைத் துறையினர் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தன்னைத் தானே தாக்கிக் கொண்டு மண்டையை உடைத்து, காயப்படுத்திக் கொண்டதகாவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே, அவரது சாவில் மர்மம் இருப்பதாக, உறவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com