தூத்துக்குடி- சென்னை இடையே கூடுதல் விமான சேவை தொடக்கம்

தூத்துக்குடி- சென்னை இடையே, திங்கள்கிழமை முதல் கூடுதலாக ஒரு விமான சேவை தொடங்கியது. முதல் நாளில், 102 பயணிகள் விமானத்தில் பயணம் செய்தனர்.
தூத்துக்குடி விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் வந்த விமானத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்கும் விமான நிலைய ஊழியர்கள்.
தூத்துக்குடி விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் வந்த விமானத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்கும் விமான நிலைய ஊழியர்கள்.

தூத்துக்குடி- சென்னை இடையே, திங்கள்கிழமை முதல் கூடுதலாக ஒரு விமான சேவை தொடங்கியது. முதல் நாளில், 102 பயணிகள் விமானத்தில் பயணம் செய்தனர்.
தூத்துக்குடி- சென்னை இடையே ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தினமும் இரண்டு வேளைகளில் விமானத்தை இயக்கி வருகிறது. தினமும் காலை 11 மணிக்கும், பிற்பகல் 3.10 மணிக்கும் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அந்த விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல, சென்னையில் இருந்து தினமும் காலை 9.20 மணிக்கும், நண்பகல் 1.15 மணிக்கும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஏர் கார்னிவல் நிறுவனம் சென்னை- தூத்துக்குடி விமான சேவையை தொடங்குவதாக அறிவித்தது. அதன்படி, திங்கள்கிழமை விமான சேவை தொடங்கியது. 70 பயணிகள் அமரும் வசதி கொண்ட விமானம், சென்னையில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு 3.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தை வந்தடைந்தது. முதல் நாளில், சென்னையில் இருந்து 54 பயணிகள் தூத்துக்குடிக்கு பயணம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் இருந்து மாலை 4.15 மணிக்கு சென்னை புறப்பட்டுச் சென்ற விமானத்தில், 3 குழந்தைகள் உள்பட 48 பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானம் தினமும் மாலை 5.50 மணிக்கு சென்னை சென்றடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com