விமான நிலையத்தில் தங்கக் கட்டிகள் பறிமுதல்

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இங்குள்ள வெளிநாட்டு விமான முனையம் வருகை பகுதியில் உள்ள ஆண்கள் கழிவறையை சுத்தம் செய்ய திங்கள்கிழமை காலை 6.30 மணிக்கு துப்புரவு தொழிலாளர்கள் சென்றபோது, அங்கு கேட்பாரற்ற நிலையில் கருப்பு நிற பிளாஸ்டிக் பை கிடந்தது. தகவலின்பேரில் விமான நிலைய அதிகாரிகள் போலீஸாருடன் விரைந்து வந்து, மெட்டல் டிடெக்டர் கருவியில் சோதனை செய்தனர். அதில், அபாயகரமான பொருள் எதுவும் இல்லை என்று உறுதி செய்தவுடன் பிரித்து பார்த்தனர். அதில், 500 கிராம் எடையுள்ள, ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் இருந்தன. இதையடுத்து, அவை பறிமுதல் செய்யப்பட்டன.
கடத்தி வரப்பட்ட தங்கத்தை சோதனைக்கு பயந்து கழிவறையில் வைத்து விட்டு சென்றது யார் என்பதை கண்காணிப்பு கேமராவில் விடியோ பதிவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com