திருச்சி: ஜெயலலிதா தலைமையில் அரசு அமைக்கத்தான் மக்கள் வாக்களித்தனர் என்று திருச்சியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின் கூறினார்.
உண்ணாவிரதப் போராட்டத்தின் நிறைவாக அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசிய ஸ்டாலின், ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிடாதது ஏன்? தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை தொடங்கும்.
ஜெயலலிதா தலைமையில் அரசு அமைக்கத்தான் மக்கள் வாக்களித்தனர். தமிழகத்தில் பினாமி அரசு அமைய அல்ல. தமிழகத்தைக் காப்பாற்றும் கடமை திமுகவுக்கு உண்டு.
ஜெயலலிதா மரணம் அடைந்த போதே, ஆட்சியைக் கலைத்துவிட்டு திமுக ஆட்சி அமைத்திருக்கலாம். ஆனால், மக்கள் தேர்ந்தெடுக்கும் ஆட்சியைத் தான் திமுக அமைக்கும்.
மருத்துவர்கள் குழு அளித்த பேட்டியில் முரண்பாடுகள் உள்ளன. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது அரசு தரப்பில் ஒரு அறிக்கைக் கூட அளிக்கப்படவில்லை.