திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் புகார்: அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் அளிப்பு

திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் புகாருக்கான கடிதத்தை, அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் (பெரம்பூர்) அளித்தார்.
திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் புகார்: அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் அளிப்பு

திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் புகாருக்கான கடிதத்தை, அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் (பெரம்பூர்) அளித்தார்.
இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:-
கடந்த 18-இல் சட்டப் பேரவையில் அரசுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தப்பட்டது. அப்போது, திமுக எம்எல்ஏக்களால் வரம்பு மீறிய சம்பவங்கள் நடந்தன. சிலர் மேஜையை உடைத்து, சேர்களை வீசினர்.
பேரவைத் தலைவர் ஏற்கெனவே ஒரு சாலை விபத்தில் இருந்து தப்பித்தவர். அவரது உடல் மீது கைவைத்து பிடித்துத் தள்ளினர். இது எனக்கு (வெற்றிவேல்) மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. எனவே, கடந்த திங்கள்கிழமையன்று பேரவைத் தலைவரிடம் இதுபற்றி சில எம்எல்ஏக்களின் பெயரைக் குறிப்பிட்டு புகார் எழுதிக் கொடுத்துள்ளேன். அதை செவ்வாய்க்கிழமையன்று நினைவுபடுத்தி இருக்கிறேன்.
இந்தக் கடிதத்தை உரிமைக் குழுவுக்கு அனுப்புவதாக பேரவைத் தலைவர் தனபால் தெரிவித்தார். அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் பிரச்னை செய்யவில்லை.
காலம் தாழ்த்தினால் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்று கூறிய திமுக பின்னர், தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஒரு வாரம் கழித்து நம்பிக்கைத் தீர்மானத்தை கொண்டு வரும்படி கேட்டனர். உணர்ச்சிவசப்பட்டு பேசுவது வேறு. இடத்தைவிட்டு எழுந்து சென்று செயல்படுவது என்பது வேறு. எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் அதைக் கண்டிக்கவில்லை. இதில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com