கார்பன் எரிவாயுத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்: தொல்.திருமாவளவன்

புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயுத் திட்டத்தை தடுத்து நிறுத்த, மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கார்பன் எரிவாயுத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்: தொல்.திருமாவளவன்

புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயுத் திட்டத்தை தடுத்து நிறுத்த, மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கோவையில் அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயுத் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பது கண்டிக்கத்தக்கதாகும். இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டால், 25 ஆண்டுகளுக்குப் பின்பு டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், விவசாயம் முற்றிலும் அழிந்து குடிநீர்ப் பிரச்னை ஏற்படும். எனவே, இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து, அனுமதியைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவது மிகவும் வருத்தம் அளிக்கக் கூடியதாக உள்ளது.
சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு என்பது அவை விதிகளில் இல்லை என்ற போதிலும், எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை சட்டப் பேரவைத் தலைவர் நிறைவேற்றி இருக்கலாம்.
சட்டப்பேரவைத் தலைவரை ஜாதியின் அடிப்படையில் இழிவுபடுத்தப்பட்ட நிகழ்வு நடைபெற்று இருந்தால், அதை தமிழக முதல்வர் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com