தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள 3ஆவது அலகில் கொதிகலன் பழுதானதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் திருவள்ளுர் அனல்மின் நிலையத்திலும் 2ஆவது அலகில் ஏற்பட்ட கொதிகலன் பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வல்லூர் அனல்மின் நிலைய முதலாவது அலகில் கொதிகலன் பழுதானதால் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.