பன்னீர்செல்வம் நியமித்த உளவுத்துறை ஐ.ஜி. டேவிட்சன் தேவாசிர்வாதம் மாற்றம்

தமிழக உளவுத் துறை ஐ.ஜி.ஆக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பன்னீர்செல்வம் நியமித்த உளவுத்துறை ஐ.ஜி. டேவிட்சன் தேவாசிர்வாதம் மாற்றம்


சென்னை: தமிழக உளவுத் துறை ஐ.ஜி.ஆக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவர்  சென்னை காவல்துறை நல்வாழ்வு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். இந்த பணியிட மாற்ற உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தமிழக உள்துறை தலைமைச் செயலர் அபூர்வா வர்மா வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் இருந்த போது, உளவுத் துறை ஐ.ஜி.யாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. உளவுத் துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு 11 நாட்களில், அவர் காவல்துறை நல்வாழ்வு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com