பிப்ரவரி 25, 26-இல் மதிமுக உயர்நிலை குழு, பொதுக் குழுக் கூட்டம்

கோவையில், வரும் 25, 26 தேதிகளில் மதிமுக உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், பொதுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

கோவையில், வரும் 25, 26 தேதிகளில் மதிமுக உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், பொதுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
கோவையில் இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க சனிக்கிழமை கோவை வரும் மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கு, கோவை மாநகர், புறநகர் மாவட்ட அமைப்பு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, வரும் 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு சத்தி சாலை, சி.கே.காலனியில் உள்ள மதிமுக அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் இல்லத்தில் மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து, மாலை 4 மணிக்கு காந்திபுரம் ஆர்.வி.ஹோட்டலில் உள்ள வேலுமணி கலையரங்கத்தில் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. பின்னர், சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் உள்ள ஸ்ரீசாய் திருமண மண்டபத்தில் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக் குழுக் கூட்டத்தில் வைகோ சிறப்புரையாற்றுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com