69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் 69 லட்சம்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இந்தப் புதிய திட்டம் இன்று (பிப்.24) ரூ.13.42 கோடி மதிப்பிலான மரக்கன்றுகள் நடும் திட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி மகிழம்பூ மர கன்றினை நட்டு துவக்கி வைத்தார்.

சென்னை தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கல்வெட்டையும் அவர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com