தஞ்சாவூர்: அதிமுகவில் எந்தப் பதவிக்கும் நான் வர மாட்டேன் என்று தஞ்சையில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்தார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்படுகிறது. அந்த வரிசையில் தஞ்சாவூரில் நடைபெறும் விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் இருக்கும்வரை அதிமுகவை யாராலும் எதுவும் செய்ய முடியாது. பலரும் கூறுவது போல நான் அதிமுகவில் எந்தப் பதவிக்கும் வர மாட்டேன். ஆனால் பதவிக்கு வராமலேயே அதிமுக என்னும் இயக்கத்தை பாதுகாப்பேன்.
திமுகவின் செயல் தலைவராக இருக்கின்ற ஸ்டாலின் இப்போது செயல்படாத தலைவராக ஆகி விட்டார்.
இவ்வாறு நடராசன் பேசினார்.