தமிழ்நாடு
கோவை சென்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
ஈஷா யோகா மைய விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை சென்றார்.
ஈஷா யோகா மைய விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை சென்றார்.
கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி ஆதியோகி சிவன் திருமுகச் சிலை இன்று திறக்கப்பட உள்ளது. மஹா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்நிலையில் ஈஷா யோகா மைய விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை சென்றார்.
முன்னதாக அவர் விழாவில் பங்கேற்க இன்று மாலை கோவை வரும் பிரதமர் மோடியை வரவேற்கவும் உள்ளார். விழாவையொட்டி அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.