விராலிமலை ஒன்றிய அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் விழா அன்னதானம், இனிப்பு வழங்கி இன்று கொண்டாடப்பட்டது.
விராலிமலை அதிமுக ஒன்றியச்செயலர் மு. சுப்பையா தலைமைவகித்தார், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ஏ. வி. ராஜேந்திரன், துணைச்செயலர் வி. முருகேசன் முன்னிலை வகித்தார். இதில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று காமராஜர் நகரில் இருந்து பன்னீர்செல்வம், தீபாவை வாழ்த்தி முழக்கம் எழுப்பியவாறு கடைவீதி வழியாக ஊர்வலமாக சென்று சோதனைச்சாவடி அருகே அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர், அதனைத்தொடர்ந்து அன்னதானம், இனிப்பு வழங்கப்பட்டது.
இதில், ஊராட்சி செயலர்கள், கிளைச்செயலர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.