சென்னை: அரசியல் நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக, திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிப்ரவரி 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு, கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார்.
திமுகவில் உள்ள 65 மாவட்டச் செயலாளர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.