லாரி மீது வேன் மோதல்: 3 பேர் சாவு; 22 பேர் காயம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே வியாழக்கிழமை அதிகாலை சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே வியாழக்கிழமை அதிகாலை சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர்.
கடலூர் பகுதியைச் சேர்ந்த 25 பேர், காது குத்து நிகழ்ச்சிக்காக திருச்செந்தூர் சென்றுவிட்டு புதன்கிழமை இரவு ஒரு வேனில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
வேனை கடலூர் தச்சன்குப்பம் தாலுகா ஆபீஸ் சாலை, குமரவேல் மகன் திலீபன் வேலு (21) ஓட்டினார்.
வியாழக்கிழமை அதிகாலை சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பகுதியில் வேன் வந்தபோது, மணப்பாறையில் இருந்து கல் ஏற்றிக் கொண்டு புதுச்சேரி செல்லும் வழியில் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக வேன் மோதியது.
இதில் கடலூர் மாவட்டம், பச்சயான்குப்பத்தைச் சேர்ந்த ராஜன் மகன் புவனேஸ் (15), மஞ்சஞ்குப்பத்தைச் சேர்ந்த ராஜாபாதர் மகன் சேகர் (50), டி.எஸ்.ஆர். நகர் உண்ணாமலை செட்டி காலனியைச் சேர்ந்த புருஷோத்தமன் மகள் சுமித்ரா (20), ராமசாமி மனைவி தவமணி, முத்து மனைவி பரமேஸ்வரி, வேலாயுதநாடார் மகன் ஐயப்பன், தியாகராஜன் மனைவி சந்திரோதயம், ராமமூர்த்தியின் மகன் ரவி, நளமகாராஜன், தமிழ்வாணன் மகன் ரஞ்சித் உள்பட வேனில் வந்த 25 பேரும் காயம் அடைந்தனர்.
இவர்கள் திருச்சி அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்களில் புவனேஸ், சேகர் இருவரும் செல்லும் வழியிலேயே இறந்தனர். சுமித்ரா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். மற்ற 22 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து சமயபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநரான சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, மூங்கில் ஊருணியைச் சேர்ந்த ராமதாஸ் மகன் செந்தில் (32) என்பவரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com