ஓ.பன்னீர்செல்வத்தின் சதித் திட்டங்கள் அம்பலம்

ஓ.பன்னீர்செல்வத்தின் சதித் திட்டங்கள் அம்பலமாகி விட்டதாக அதிமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69 -ஆவது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமைக் கழகத்தில்  நடைபெற்ற மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்துப் பார்வையிடும் அக்கட்சியின் துணை பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன், முதல்வர் எடப
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69 -ஆவது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்துப் பார்வையிடும் அக்கட்சியின் துணை பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன், முதல்வர் எடப

ஓ.பன்னீர்செல்வத்தின் சதித் திட்டங்கள் அம்பலமாகி விட்டதாக அதிமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்த தினத்தையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்த சதித் திட்டங்கள் மக்கள் மத்தியில் அம்பலமாகி விட்டதால் அப்போது அவர் தினம் ஒரு பொய்யைக் கூறுகிறார். அவற்றுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார்.
இதையடுத்து, "அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளாரே?' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து தினகரன் கூறியதாவது:
பன்னீர்செல்வம் உள்பட நிர்வாகிகள் டிசம்பர் 29-இல் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி வந்து கொடுத்தனர்.
இந்தச் சூழ்நிலையில், திமுகவுடன் சேர்ந்து அதிமுகவை அழித்து விட வேண்டும் எனவும், தொடர்ந்து முதல்வராக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னை வளர்த்த கட்சி அழிந்தாலும் பரவாயில்லை என எல்லா முயற்சிகளையும் செய்தார். அவை அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com