திருவாடானையில் எம்எல்ஏ கருணாஸ் கார் மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள தேவர் சிலைக்கு அவர் மாலை அணிவிக்க வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கருணாஸ் கார் மீது காலணி வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் கருணாஸின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் கார் மீது காலணியை வீசிய சம்பவம் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுகவில் சசிகலா தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நடிகர் கருணாஸ், திருவாடானை தொகுதியில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். முக்குலத்தோர் புரட்சி படை என்ற கட்சியையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.