சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், ஜெயலலிதா பெயரில் அரசு நிகழ்ச்சி நடைபெறுவது சரியா என்று தலைமைச் செயலரை சந்தித்த மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அதன்பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், ஜெயலலிதாவின் பெயரில் விழா கொண்டாடுவது என்ன நியாயம் என்று கேட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.
மேலும், பதவியேற்பு உறுதிமொழியை மீறி முதல்வர் பழனிசாமி செயல்படுவதாகவும், ஜெயலலிதா பெயரிலான திட்டங்களை அரசு திட்டங்களாக பெயர் மாற்ற வேண்டும் என்று தான் வலியுறுத்தியதாகவும் ஸ்டாலின் கூறினார்.