காங்கிரஸ் கட்சியிலிருந்து ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டத் தலைவர்களை நீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் விதத்தில் செயல்பட்டதால் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் பொறுப்பில் இருந்து குட்லக் ராஜேந்திரன் நீக்கப்படுகிறார். அவருக்குப் பதிலாக எம்.தெய்வேந்திரன் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத் தலைவராக இருந்த எஸ்.வேலாயுதம், கட்சியில் இருந்து விலகிவிட்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் விதத்தில் செயல்பட்டதாலும் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். அவருக்குப் பதில் ஸ்ரீராஜா சொக்கர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் கடத்திய வழக்கில் குட்லக் ராஜேந்திரன் அண்மையில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.