2 மாவட்டத் தலைவர்கள் காங்கிரஸில் இருந்து நீக்கம்

காங்கிரஸில் கட்சியில் இருந்து ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களின் தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸில் கட்சியில் இருந்து ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களின் தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்ட அறிக்கை:கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் விதத்தில் செயல்பட்டதால் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் குட்லக் ராஜேந்திரன் நீக்கப்படுகிறார். அவருக்குப் பதிலாக எம்.தெய்வேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், விருதுநகர் மாவட்டத் தலைவராக இருந்த எஸ்.வேலாயுதம் கட்சியில் இருந்து விலகி அவப்பெயர் ஏற்படும் விதத்தில் செயல்பட்டதால் நீக்கப்படுகிறார். அவருக்குப் பதில் ஸ்ரீராஜா சொக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com