சென்னை: எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவையின் பொறுப்பாளர்கள், கொள்கைகள் குறித்து நாளை அறிவிக்கப்படும் என தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவைக்கு தான் செயலாளராக நானே செயல்படுவேன் என்றும் பேரவையின் நிர்வாகிகள் மற்றும் கொள்கைகள் நாளை அறிவிக்கப்படும்.
உண்மையான அதிமுக தொண்டர்கள் என்னிடம் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக விளக்கிய தீபா, தான் அரசியலில் ஈடுபடக் கூடாது என பலர் தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டிய தீபா, விரைவில் அரசியல் அறிக்கைகளை எதிர்பார்க்கலாம் என்று கூறினார்.