பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் பெண் சாவு

பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தார்.

பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.
திருச்சி பொன்மலைப்பட்டி சாந்தி தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (66). இவருக்கு காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகள் இருந்ததால், திருச்சியுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு லட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததை உறுதிசெய்தனர்.இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக கடந்த 19-ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் லட்சுமி அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பன்றிக் காய்ச்சல் நோயாளிகளுக்கான பிரத்யேக வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com