வறட்சி நிவாரணத்தை கூடுதலாக்கக் கோரி மார்ச் 3-இல் ஆர்ப்பாட்டம்

வறட்சி நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, தமிழகம் முழுவதும் மார்ச் 3-இல் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

வறட்சி நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, தமிழகம் முழுவதும் மார்ச் 3-இல் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் வே.துரைமாணிக்கம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் நா.பெரியசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை:-
140 ஆண்டுகளுக்குப் பின்பு கடுமையான வறட்சியை தமிழகம் சந்தித்துள்ள நிலையில், வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. நில வரி தள்ளுபடி என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மற்ற அறிவிப்புக்கள் கண்துடைப்பாகவும். ஏமாற்றுவதாகவும் உள்ளது. எனவே முறையாக ஆய்வுகளையும் கணக்கெடுப்பையும் நடத்தி நிவாரண உதவிகளை மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்களில் மார்ச் 3-இல் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com