"ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மார்ச் 5 -இல் பரப்புரை'

மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து மார்ச் 5 -ஆம் தேதி திருச்சியிலிருந்து நெடுவாசல் நோக்கி இருசக்கர வாகன பரப்புரை மேற்கொள்ளப்படும் என, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் தெரிவித்தார்.

மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து மார்ச் 5 -ஆம் தேதி திருச்சியிலிருந்து நெடுவாசல் நோக்கி இருசக்கர வாகன பரப்புரை மேற்கொள்ளப்படும் என, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் திட்டத்தைக் கண்டித்து மே 17 இயக்கத்தின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக, அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ற பெயரில் மீத்தேன் திட்டத்தை, மத்திய அரசு மீண்டும் தமிழர்கள் தலையில் திணிக்கப் பார்க்கிறது. காவிரி டெல்டா பகுதிகளை ஒட்டுமொத்தமாக பாலைவனமாக்ககூடிய இந்தத் திட்டத்துக்கு எதிராக மே 17 இயக்கம் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசைக் கண்டித்து வரும் மார்ச் 5 -ஆம் தேதி திருச்சியில் இருந்து நெடுவாசல் நோக்கி இருசக்கர வாகன பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com