ஜாக்கிரதையாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்: கமல்ஹாசன்

தமிழக மக்கள் ஜாக்கிரதையாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டம் குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜாக்கிரதையாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்: கமல்ஹாசன்

தமிழக மக்கள் ஜாக்கிரதையாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டம் குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை இரவு தனது சுட்டுரை (டிவிட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், "பூமியின் இயற்கை வளத்தையும் ஏழையர் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தரினும், பின்னர் பெருநஷ்டமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர, மற்றொரு பதிவில், "இயற்கையானது குறிப்பிட்ட ஒரு மனிதனுக்காக எந்த வளங்களையும் வழங்கவில்லை. அது அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான வளங்களை மட்டுமே வழங்குகிறது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சில கருத்துகளை பதிந்துள்ளார். அவற்றில், "இயற்கை, ஏழைகளின் வாழ்வாதாரத்தை அழித்து தொடங்கப்படுகிற எந்த ஒரு திட்டமும், நல்ல திட்டம் இல்லை. அது செயல்படுத்தும் நிறுவனம் வெற்றியை நோக்கிச் செல்லாது' என்றும் "தமிழக மக்கள் ஜாக்கிரதையாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்' என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com