டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா திட்டங்களுக்கு முன்னுரிமை

உயர்கல்வி பயின்ற மாணவர்களின் தரத்தையும் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் நடைபெற உள்ள கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மத்திய

தாம்பரம்: உயர்கல்வி பயின்ற மாணவர்களின் தரத்தையும் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் நடைபெற உள்ள கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மத்திய அரசுத் திட்டங்களான "தொழில்நுட்ப இந்தியா',"திறன்மிகு இந்தியா',"ஸ்டார்ட்-அப் இந்தியா',"இந்தியாவில் தயாரிப்போம்' ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு ஐ.சி.டி. அகாடமியின் தலைமை செயல் அதிகாரி சிவகுமார் கூறினார்.

"இந்தியாவில் மாற்றத்தை உருவாக்குவதற்கான பயணம்' என்ற தலைப்பில், கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலில் பிரபல கல்வி நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு ஐ.சி.டி.அகாடமி தொழில் துறை சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 28-ஆம் தேதி, மார்ச் 1-ஆம் தேதி ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது.

கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், தொழில் துறையைச் சேர்ந்தவர்களும் தாங்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கும் ஒரு பொது மேடையாக இந்த நிகழ்ச்சி திகழும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com