யாரைக் காப்பாற்ற தர்மத்தைக் கொல்கிறார்: செங்கோட்டையனுக்கு கே.பி. முனுசாமி காட்டம்

மருத்துவமனையில் தாம் ஜெயலலிதாவை பார்த்ததாகக் கூறும் செங்கோட்டையன், யாரைக் காப்பாற்ற தர்மத்தைக் கொல்கிறார் என்று முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாரைக் காப்பாற்ற தர்மத்தைக் கொல்கிறார்: செங்கோட்டையனுக்கு கே.பி. முனுசாமி காட்டம்


சென்னை: மருத்துவமனையில் தாம் ஜெயலலிதாவை பார்த்ததாகக் கூறும் செங்கோட்டையன், யாரைக் காப்பாற்ற தர்மத்தைக் கொல்கிறார் என்று முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து சென்னையில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. முனுசாமி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை தான் சந்தித்ததாக செங்கோட்டையன் சொல்வது முற்றிலும் பொய்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை கண்ணாடி வாயிலாக தான் பார்த்ததாகவும், அப்போது அவர் இரண்டு விரல்களை காட்டினார் என்றும் செங்கோட்டையன் கூறுகிறார்.

ஆனால், அவரும் எங்களைப் போல மருத்துவமனைக்கு தினந்தோறும் வருவார். நாங்கள் அமரும் இடத்தில்தான் அமர்ந்திருப்பார். அதில் இடைக்காலத் தேர்தல் பணிக்காக அவர் 20 நாட்கள் தொகுதிக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில், தற்போது திடீரென தான் மருத்துவமனையில் ஜெயலலிதாவை சந்தித்ததாக பொய் சொல்லியிருக்கிறார்.

யாரைக் காப்பாற்ற தர்மத்தை கொலை செய்கிறார் என்று தெரியவில்லை என செங்கோட்டையனுக்கு முனுசாமி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com