மார்ச் 7-இல் போக்குவரத்துத் தொழிலாளர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை

போக்குவரத்துத் தொழிலாளர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை மார்ச் 7-இல் நடக்கிறது.

போக்குவரத்துத் தொழிலாளர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை மார்ச் 7-இல் நடக்கிறது.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தை மாற்றியமைப்பதற்காக, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இதன்படி, 2013-ஆம் நடத்தப்பட வேண்டிய 12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 2 ஆண்டுகள் தாமதமாக 2015-ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு ஊதியம் மாற்றியமைக்கப்பட்டது.
இந்த நிலையில், 13-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை நடத்துமாறு தொழிற்சங்கத்தினர் அளித்த கோரிக்கையை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்றுகொண்டார்.
இதன்படி, சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து பயிற்சி பள்ளி வளாகத்தில் மார்ச் 7-இல் நடைபெற உள்ளது.
இதில் அண்ணா தொழிற்சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உட்பட பல்வேறு முக்கிய தொழிற்சங்கத்தினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com