சென்னையில் ஆட்டோ மீது நடிகர் ரஜினி மகள் சவுந்தர்யா கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோ ஓட்டுநர் சிறிது காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் சாலையோரத்தில் நின்றிருந்த ஆட்டோ மீது ரஜினி மகள் சவுந்தர்யா ஓட்டி வந்த கார் மோதியது. இதில், ஆட்டோவில் இருந்த ஓட்டுநர் சிறிது காயமடைந்துள்ளார்.
இதையடுத்து நடிகர் தனுஷ்க்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நடிகர் தனுஷ், ஆட்டோ ஓட்டுநரிடம் செய்த சமரச பேச்சுவார்த்தையை அடுத்து காவல்நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
விபத்துக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.