குஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுத்தது ஏன்? மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு நோட்டீஸ்

தேர்தல் வழக்கை காரணம் காட்டி, தனது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) புதுப்பிக்க மறுத்ததை எதிர்த்து நடிகை குஷ்பு தாக்கல் செய்த மனுவுக்கு, சென்னை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுத்தது ஏன்? மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு நோட்டீஸ்


சென்னை: தேர்தல் வழக்கை காரணம் காட்டி, தனது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) புதுப்பிக்க மறுத்ததை எதிர்த்து நடிகை குஷ்பு தாக்கல் செய்த மனுவுக்கு, சென்னை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் நடிகை குஷ்பு தாக்கல் செய்த மனு விவரம்: சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம், எனது கடவுச்சீட்டை கடந்த 2012 -ஆம் ஆண்டு மார்ச் 9 -இல் புதுப்பித்து வழங்கியுள்ளது. இது 2022 -ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும்.

தொடர் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டதால், எனது கடவுச்சீட்டில் உள்ள தாள்கள் முடிந்துவிட்டன. ஆகையால், கூடுதல் தாள்களை இணைத்து கடவுச்சீட்டை புதுப்பித்து வழங்கக் கோரி, சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தேன்.

ஆனால், ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும், 2011 -ஆம் ஆண்டு தேர்தல் வழக்கை காரணம் காட்டி, எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஆண்டிப்பட்டி வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

இவற்றை கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகள் கவனத்தில் கொள்ளாமல், எனது கடவுச்சீட்டை புதுப்பிக்க மறுத்து வருகின்றனர்.

இதனால், குடும்பத்துடன் செல்லவிருந்த வெளிநாட்டு சுற்றுப் பயணம் தள்ளி போகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜேந்திரன், இதுதொடர்பாக, ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு, சென்னை மண்டல கடவுச்சீட்டு அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com