பொலிவுறு நகரத்துக்கான இலச்சினை: பொதுமக்கள் தேர்வு செய்ய அழைப்பு

சென்னை பொலிவுறு நகரத்துக்காக வடிவமைக்கப்பட்ட இலச்சினையை பொதுமக்கள் தேர்வு செய்யலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சென்னை பொலிவுறு நகரத்துக்காக வடிவமைக்கப்பட்ட இலச்சினையை பொதுமக்கள் தேர்வு செய்யலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சென்னை பொலிவுறு நகர நிறுவனத்தின் நிர்வாகக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஆலோசகர்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட 7 மாதிரி இலச்சினைகளை பொதுமக்களின் வாக்கெடுப்பு மூலம் தெரிவு www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கார்த்திகேயன் மேலும் கூறியதாவது:-
ஜனவரி 21 கடைசி: இலச்சினைகளைத் தெரிவு செய்து 1 முதல் 7 வரை வரிசைப்படுத்தி வாக்களிக்கவும், மேலும் புதிய சின்னத்தை வடிவமைத்தும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் ஜனவரி 21 -ஆம் தேதி கடைசி நாளாகும்.
கூடுதல் விவரங்களுக்கு 044-2561 9677 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com