சென்னை: ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் தனக்கு வழங்கப்பட்ட யுவபுரஸ்கார் விருதினை திரும்ப அளித்தார்.
கானகன் என்ற நூலுக்காக, லஷ்மி சரவணக்குமாருக்கு யுவபுரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
தற்போது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு தன்னுடைய ஆதரவை தெரிவிக்கும் வகையில், தனக்கு வழங்கப்பட்ட யுவபுரஸ்கார் விருதினை லஷ்மி சரவணக்குமார் திரும்ப அளித்தார்.