தமிழர்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது: திரைப்பட இயக்குநர் சமுத்திரக்கனி

ஜல்லிக்கட்டு மட்டுமின்றி தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த எவ்வித உரிமைகளையும் விட்டுக் கொடுக்க முடியாது என திரைப்பட இயக்குநரும், நடிகருமான பி.சமுத்திரக்கனி தெரிவித்தார்.
நத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் சமுத்திரகனி.
நத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் சமுத்திரகனி.

ஜல்லிக்கட்டு மட்டுமின்றி தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த எவ்வித உரிமைகளையும் விட்டுக் கொடுக்க முடியாது என திரைப்பட இயக்குநரும், நடிகருமான பி.சமுத்திரக்கனி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேருந்து நிலையம் அருகே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்கள் பின்பற்றி வந்த பண்பாடு மற்றும் கலாச்சாரம், எதிர்காலத்திலும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழர்களின் உரிமைகளை எந்த சூழலிலும் விட்டுக் கொடுக்க முடியாது. அந்த வகையில், தமிழர்களின் அடையாளமாக உள்ள ஜல்லிக்கட்டுக்காக, மாணவர்கள் தன்னெழுச்சியுடன் போராடி வருகின்றனர்.
அதற்கு சமூக ஆர்வலர்களும், பெண்களும், பொதுமக்களும் முழு அளவில் தமிழகம் முழுவதும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
தமிழக மக்களின் உணர்வுப்பூர்வமான இந்த போராட்டம் உறுதியாக வெற்றிப் பெறும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com