அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு: முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்?

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி அளிக்கும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, அலங்காநல்லூரில் நாளை காலை ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு: முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்?


சென்னை: ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி அளிக்கும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, அலங்காநல்லூரில் நாளை காலை ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அலங்காநல்லூரில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடங்கி வைக்க உள்ளதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன். அதற்காக, அவர் இன்று மாலை சென்னையில் இருந்து மதுரை செல்லவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வாடிவாசலை தூய்மைப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து, அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

3 ஆண்டுகளுக்குப் பிறகு அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளதால், ஊரே திருவிழாக் கோலம் பூண உள்ளது.

பாலமேட்டில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com