செங்குன்றம், புழல், பாடியநல்லூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் உண்ணாவிரதம், மாட்டு வண்டிப் பேரணி, ஆர்ப்பாட்டம், கடையடைப்பு என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழர் பண்பாடு வீர விளையாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் ஏ.வி.ராஜன் தலைமையில் செங்குன்றம் வடகரை முதல் புழல் வரை வெள்ளிக்கிழமை மாட்டு வண்டிப் பேரணி
நடைபெற்றது. இதில், ஏராளமான மாட்டு வண்டிகள் சென்றன. அப்போது, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். காவல்
துறையினர் தடுத்தும், தடையை மீறி, இப்பேரணி நடைபெற்றது.
செங்குன்றம் கூட்டுச்சாலை சந்திப்பில், மாற்றுத் திறனாளிகள் சார்பில் 50-க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், செங்குன்றம், பாடியநல்லூர், புழல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இப்பகுதிகளில் உள்ள வியாபாரிகள், தனியார் நிறுவனத்தினர் கடைகளை அடைத்தும், விடுமுறை அளித்தும் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.