மெரீனா: நான்காவது நாள் போராட்டத் துளிகள்....

மெரீனா: நான்காவது நாள் போராட்டத் துளிகள்....

* பெசன்ட்நகர் கடற்கரை சிறு வியாபாரிகள் பாதயாத்திரையாக வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
* வெள்ளிக்கிழமை என்பதால் போராட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் கடற்கரையிலேயே நண்பகல் தொழுகை செய்தனர்.
* போராட்டம் நடைபெற்ற பகுதி முழுவதும் உளவுப் பிரிவு போலீஸாரை காண முடிந்தது.
* கூட்டம் அதிகமாக இருந்ததால் கல்லூரி மாணவர்கள் சிறு, சிறு குழுக்களாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
* இணைப்புச் சாலை முழுவதும் மொபைல் கழிப்பறைகள் வெள்ளிக்கிழமை வைக்கப்பட்டிருந்தன.
* ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 3 இடங்களில் மணல் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
* போராட்டக் குழுவினரே மெரீனாவில் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.
* சென்னை புறநகர் பகுதியில் இருந்து அதிகமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
* கல்லூரி மாணவர்கள் பிரதமர் மோடியை விமர்சித்து கடுமையான கோஷங்களை எழுப்பினர்.
* கல்லூரி மாணவிகள் தனியாக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* சுமார் 7 லட்சம் பேர் குவிந்ததால் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com