தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்த மசோதா குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
விலங்கு வதைச் சட்டத்தில் திருத்தம் செய்து, தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்திருத்த மசோதாவை ஏற்றுக் கொண்டு அதனை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ்அனுப்பி வைத்துள்ளார் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.