ஓய்வூதிய அலுவலகம் புதிய முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கருவூலக் கணக்குத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில் ஈ.வெ.கி.சம்பத் மாளிகையில் இயங்கி வந்தது.
நந்தனத்துக்கு மாற்றம்: தற்போது அந்த அலுவலகம் ஒருங்கிணைந்த நிதித் துறை அலுவலகக் கட்டடம் (தரைத்தளம்), 571, அண்ணாசாலை, கால்நடை மருத்துவமனை வளாகம், நந்தனம், சென்னை -35 என்ற முகவரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை (ஜூலை 3) முதல் புதிய முகவரியில் அலுவலகம் செயல்படும் என்று கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் அறிவித்துள்ளார்.