உள்ளாட்சித் தேர்தல் பற்றி ஜூலை இறுதிக்குப் பிறகே முடிவு: மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது பற்றி ஜூலை இறுதிக்குப் பிறகே முடிவெடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் பற்றி ஜூலை இறுதிக்குப் பிறகே முடிவு: மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது பற்றி ஜூலை இறுதிக்குப் பிறகே முடிவெடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் இன்று பதில் அளித்தது.

அதில், உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் இன்னும் முடிவடையாததால், ஜூலை மாத இறுதிக்குப் பிறகே, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக இதே வழக்கில், ஜூலைக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று மநில தேர்தல் ஆணையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com