சென்னை: தமிழகத்தில் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:
நீலகிரி மாவட்ட ஆட்சியராக இன்னொசென்ட் திவ்யாவும், அரியலூர் மாவட்ட ஆட்சியராக லட்சுமி ப்ரியாவும், சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக சுதா தேவியும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளராக கிரண் குராலாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.