சென்னையில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பேட்டரி பேருந்துகள் இயக்கப் படும் என்று அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ் ராஜன் எழுப்பிய கேள்விக்கு தமிழக போக்குவரத்து துறை அமைச்சரான விஜபாஸ்கர் கூடிய விரைவில் சென்னையில் பேட்டரி அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று பதிலளித்தார். அதற்கான சோதனை ஓட்டமும், ஆய்வுகளும் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.