மேலும் 27 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் மேலும் 27 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

தமிழக காவல்துறையில் மேலும் 27 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
நீண்ட நாள்களாக ஒரே இடத்தில் பணிபுரிந்தவர்களும்,விருப்பத்தின் அடிப்படையிலும், நிர்வாக வசதிக்காகவும் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். தமிழக காவல்துறையில் 32 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன் சனிக்கிழமை உத்தரவிட்டார்.
இந்நிலையில்,மேலும் 27 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து ராஜேந்திரன் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டி.எஸ்.பி. எஸ்.நாராயணன் சாத்தூருக்கும், சாத்தூர் டி.எஸ்.பி. என்.சூரியமூர்த்தி சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கும், வாழப்பாடி டி.எஸ்.பி. எஸ்.பாஸ்கரன் ஓமலூருக்கும், திருப்பூர் உதவி ஆணையர் கே.மணி கோயம்புத்தூர் சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கும், கோயம்புத்தூர் சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி. வே.வேலன் சேலம் மாநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணியிட மாற்றம் செய்யப்பட்ட 27 டி.எஸ்.பி.களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com