தமிழ்நாடு
கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு
கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான புகார் மனுவை இந்து மக்கள் கட்சியினர் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ளனர். அதில், சமூகச்சீர்கேடுகளை விளைவிக்கும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்தை கேலி செய்யும் வகையில் நிகழ்ச்சி இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் நிகழ்ச்சி நடத்தும் கமலை கைது செய்யக் கோரியும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.