சாலை விபத்தில் உயிரிழந்த பொறியாளரின் குடும்பத்துக்கு ரூ. 51.65 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சாலை விபத்தில் உயிரிழந்த மென்பொருள் பொறியாளரின் குடும்பத்துக்கு ரூ.51.65 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சாலை விபத்தில் உயிரிழந்த மென்பொருள் பொறியாளரின் குடும்பத்துக்கு ரூ.51.65 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் கூடூர் பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார் சைனூர்( 26). இவர், சென்னை சிறுசேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த 2012 - ஆம் ஆண்டு ஜூலை 2 - ஆம் தேதி மேடவாக்கம் கூட்டு ரோட்டில் இருந்து ஈச்சங்காட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோதிய விபத்தில் சரத்குமார் சைனூர் உயிரிழந்தார். இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு, உயிரிழந்த சரத்குமாரின் தந்தை சைனூர் நாராயணா, தாயார் நாகேஸ்வரி ஆகியோர் சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.பிரியா, மனுதாரர்களுக்கு ரூ.51.65 லட்சம் இழப்பீடாக வழங்க, ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com