கமலை மிரட்டக் கூடாது: நாஞ்சில் சம்பத்

கமலை அமைச்சர்கள் பலர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் குரல் கொடுத்துள்ளார். 
கமலை மிரட்டக் கூடாது: நாஞ்சில் சம்பத்

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்திருப்பதாக கமல்ஹாசன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறினார்.

அவரின் இந்த கருத்துக்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கமல்ஹாசனை மிரட்டக் கூடாது நாஞ்சித் சம்பத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், கமலை ஒருமையில் பேசுவதும், வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் மிரட்டக்கூடாது. தமிழ்திரைக்கு உலக அரங்கில் அங்கீகாரம் கிடைக்கும் எனில் கமலால் மட்டுமே.

அவல் எங்கே கிடைக்கிறது என ஸ்டாலின் ஏங்கும் போது கமல் சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். ஊழல் நடக்கிறது என்றால் யார் செய்கிறார்கள் என்பதை கமல் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com