சித்திரவீணை கலைஞர் ரவிகிரணுக்கு 'சங்கீத கலாநிதி' விருது!

புகழ்பெற்ற சித்திரவீணை இசைக் கலைஞர் ரவிகிரணுக்கு மியூசிக் அகாடமியின் இந்த ஆண்டுக்கான 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்பட்டுள்ளது.
சித்திரவீணை கலைஞர் ரவிகிரணுக்கு 'சங்கீத கலாநிதி' விருது!

சென்னை: புகழ்பெற்ற சித்திரவீணை இசைக் கலைஞர் ரவிகிரணுக்கு மியூசிக் அகாடமியின் இந்த ஆண்டுக்கான 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மியூசிக் அகாடமியின் தலைவர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சித்திரவீணை இசைக் கலைஞர் ரவிகிரணுக்கு மியூசிக் அகாடமியின் இந்த ஆண்டுக்கான 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்படுகிறது. அகாடமியின் செயற்குழு உறுப்பினர்களின் ஒரு மனதான முடிவு இது.

மியூசிக் அகாடமி வழங்கி வரும் மழலை மேதைகளுக்கான உதவித்தொகையினை 1996-ஆம் ஆண்டு பெற்றவர் ரவிகிரண். அப்பொழுது அவர் மீது உண்டான நம்பிக்கையை தற்பொழுது முழுவதுமாக அவர் காப்பாற்றியுள்ளார். தன்னுடைய அபாரத் திறமையின் காரணமாக இசையுலகில் கவனிக்கத்தக்க உயரங்களை அடைந்துள்ளார்.     

அவருக்கான விருது எதிர்வரும் ஜனவரி 1-ஆம் தேதி வழங்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com