தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் குடியரசுத் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் வெங்கய்ய நாயுடுவுக்கு பிரதமர் மோடி ஆதரவு கோரினார்.
இது குறித்த செய்திக்குறிப்பு: குடியரசு வேட்பாளருக்கு ஆதரவு அளித்ததற்கு பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். அதுபோல், குடியரசுத் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் வெங்கய்ய நாயுடுவுக்கும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார். அப்போது, குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வெங்கய்ய நாயுடுவுக்கு முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.