நெடுவாசலில் தொடரும் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை அப்பகுதி மக்கள் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும்
நெடுவாசலில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற தேமுதிக மாநில துணைச்செயலர் ஜாகிர் உசேன் உள்ளிட்டோர்.
நெடுவாசலில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற தேமுதிக மாநில துணைச்செயலர் ஜாகிர் உசேன் உள்ளிட்டோர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை அப்பகுதி மக்கள் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து ஏப்.12-ம் தேதி அப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுவரும் அப்பகுதியினர் நெடுவாசல் நாடியம்மன் கோயில் அருகே 97 ஆவது நாளாக திங்கள்கிழமை மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
ஜூலை 23-இல் விஜயகாந்த் வருகை: போராட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிமுக மாநில துணைச்செயலர் ஜாகிர் உசேன் செய்தியாளர்களிடம் கூறியது: மக்களை பாதிக்கும் இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனே ரத்து செய்ய வேண்டும். தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஜூலை 23-இல் நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்க உள்ளார் என்றார். தேமுதிக மாவட்டச்செலர் ராமசாமி, மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் நேதாஜிசீனிவாசன், ஒன்றியச்செயலர் விஜயராஜகுமாரன் உள்ளிட்டோர் உடனருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com